தமிழக செய்திகள்

கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது

மறைமலைநகரில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பற்குணம் (வயது 42). இவர் மறைமலைநகர் தொழிற்சாலை பகுதிகளில் உள்ள சாலையோர டிபன் கடையில் நேற்று முன்தினம் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 பேர் தங்களுக்கும் சேர்த்து பணம் தரும்படி பற்குணத்தை மிரட்டி உள்ளனர். பற்குணம் பணம் தர மறுத்ததால் அவர்கள் இருவரும் கத்திமுனையில் மிரட்டி பற்குணம் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசில் பற்குணம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது25), பெங்களூரு பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (23) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்