தமிழக செய்திகள்

செல்போன் திருடிய 2 பேர் கைது

ஆழியாறு அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஆழியாறு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு எல்.எப்.காலனியை சேர்ந்தவர் அசோக் (வயது 40). இவர் ஆழியாறில் இருந்து கோட்டூர் செல்லும் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, சிறுநீர் கழித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் மேல் இருந்த செல்போனை அந்த வழியாக வந்த 2 பேர் திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த விக்னேஷ், முகமது நிசாத் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு