தமிழக செய்திகள்

வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது

வெள்ளி பொருட்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

அரூர்:-

அரூரை அடுத்த மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). ஓசூரில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று சக்திவேல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த காமாட்சி விளக்கு, சொம்பு, குங்கும சிமிழ், டம்ளர் உள்ளிட்ட, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதேபோல், அ.பள்ளிப்பட்டியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது பண்ணை வீட்ன் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த உண்டியல் பணம் மற்றும் டார்ச்லைட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த 2 திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்டதாக சேலம் பெரிய புதூர் காந்திநகரைச் சேர்ந்த பூபாலன் (26), கன்னங்குறிச்சி தாமரைநகரைச் சேர்ந்த அஜீத்குமார் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்