தமிழக செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது

நாகர்கோவிலில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

நாகாகோவில், 

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று வடசேரி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் பேச்சாங்குளம் பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 62) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல பட்டகசாலியன்விளை பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட ஈத்தாமொழியை சேர்ந்த பிரவீன் ராஜன் (28) என்பவரை நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு