தமிழக செய்திகள்

ஆர்.கே.பேட்டையில் குட்கா விற்ற 2 பேர் கைது

ஆர்.கே.பேட்டையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடைகளில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆர்.கே. பேட்டை அருகே வீரமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் மளிகை கடை நடத்தி வந்த ஆனந்தன் (வயது 47) என்பவர் கடையில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆனந்தை கைது செய்த போலீசார் அவர் கடையில் இருந்த 35 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அதே பகுதியில் கிஷோர் குமார் என்பவர் நடத்தி வந்த பெட்டி கடையில் சோதனை செய்தபோது 15 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது. போலீசார் கிஷோர் குமாரை கைது செய்து அந்த கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து