தமிழக செய்திகள்

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

போலீஸ்காரர் என்று மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் வேலைக்கு சென்ற இளம்பெண்ணை தாங்கள் போலீஸ்காரர்கள் என்று கூறி மிரட்டி 2 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 31), அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (32) ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பிரகாஷ், நாகராஜ் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பரிந்துரைத்தார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை