தமிழக செய்திகள்

பெண் உள்பட 2 பேர் கைது

வாலிபரை தாக்கிய வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

பொள்ளாச்சி

கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 29). இவருக்கும் தேனியை சேர்ந்த முத்துமாலை என்கிற பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் அந்த பெண்ணை உட்கார வைத்து விட்டு விஷ்ணு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் குடிபோதையில் அங்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் திடீரென்று அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் (32) என்பவரிடம் அவர் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் ஆத்திரத்தில் விஷ்ணுவும், முத்துமாலையும் சேர்ந்து சுரேசை கல்லால் தாக்கி பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுரேசை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு, முத்துமாலை ஆகியோரை கைது செய்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்