தமிழக செய்திகள்

2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்

2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்

தினத்தந்தி

பட்டுக்கோட்டை அருகே 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

கூரை வீடுகள் சாம்பல்

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் பைபாஸ் சாலை ரவுண்டானா அருகே செல்லபாண்டியன் (வயது 40), அழகு பாண்டியன் (35) ஆகியோர் கூரை வீடுகளில் தனி தனியாக வசித்து வருகின்றனர். நேற்று பகல் 12 மணி அளவில் திடீரென 2 பேரின் வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு