தமிழக செய்திகள்

பள்ளி விடுதியில் சாப்பிட்ட 2 மாணவிகள் மயக்கம்

பள்ளி விடுதியில் சாப்பிட்ட 2 மாணவிகள் மயக்கமடைந்தனர்.

தினத்தந்தி

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் தங்குவதற்கு விடுதிகளும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மாணவிகளுக்கான விடுதியில் சாப்பிட்ட 2 மாணவிகள், திடீரென வாந்தி எடுத்து மயங்கினர். இதையடுத்து அந்த மாணவிகளை உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை