தமிழக செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கூடுதல் விலைக்கு விற்பனை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நாகை மாவட்ட மேலாளர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆய்வு குழுவினர், டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்களாக பணிபுரிந்த பாலசுப்பிரமணியன், மேகநாதன் ஆகியோர் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

2 பேர் பணியிடை நீக்கம்

மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனையாளர்கள் பாலசுப்பிரமணியன், மேகநாதன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்