தமிழக செய்திகள்

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த அரபாண்டகுப்பம் சுடுகாடு அருகே உள்ள தென்னதோப்பில் கேட்பாரற்று நிலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சுடுகாடு பகுதியில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். 

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது