தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

வாலாஜா அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் முசிறி ரோட்டில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் டாஸ்மாக்கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் சென்னசமுத்திரம் மலைபேட்டையை சேர்ந்த ராஜசிம்மன் (வயது 22) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் கன்னிக்கோவில் அருகே வாலாஜாபேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்த நந்தகுமார் (24) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை