தமிழக செய்திகள்

இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது

இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி

ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் கட்டுமான பணிக்கு தேவையான இரும்பு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் 6 இரும்பு பட்டைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து நிறுவனத்தின் என்ஜினீயர் ஜோதிநாதன் (வயது 31) ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இரும்பு பொருட்களை திருடியவர்கள் ஈரோடு சூளை பாண்டியன் நகர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் கலையரசன் (21), ஈ.பி.பி. நகர் ஜனதா காலனியை சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் சந்தோஷ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்