தமிழக செய்திகள்

நாய்கள் கடித்து குதறியதில் 24 ஆடுகள் செத்தன

கண்டாச்சிபுரத்தில் நாய்கள் கடித்து குதறியதில் 24 ஆடுகள் செத்தன

தினத்தந்தி

திருக்கோவிலூர்

 கண்டாச்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 55). இவர் அருகில் உள்ள தும்பரமேடு கிராமத்தில் ஆட்டுப்பட்டி வைத்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று கண்டாச்சிபுரம் கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 நாய்கள் ஆறுமுகத்தின் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து அங்கு அடைக்கப்பட்டு கிடந்த ஆடுகளை கடித்து குதறியதில் 20 குட்டிகள் உள்பட 24 ஆடுகள் இறந்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் நாய்களின் உரிமையாளர் நாராயணன் மீது கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த வாரம் இதே நாய்கள் மாணிக்கம் என்பவரின் ஆட்டுபட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியதில் 8 ஆடுகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்