தமிழக செய்திகள்

போலீஸ்காரர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் பிரசாந்த் (வயது 32). பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அருணா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் பெரம்பலூர் முத்துலட்சுமி நகரில் பிரசாந்த் புதிதாக வீடு கட்டி கடந்த 1 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் குடி புகுந்தார். தற்போது விடுமுறையில் உள்ள பிரசாந்த் தனது மனைவி, குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு களரம்பட்டிக்கு சென்று விட்டார்.

இதையடுத்து நேற்று மாலை பிரசாந்த் குடும்பத்தினருடன் புதிய வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ஒரு வைர நெக்லஸ், தோடு, ரூ.20 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து