தமிழக செய்திகள்

“2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ

2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்போது எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சிறைக்கு செல்வார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

2ஜி வழக்கு குறித்து அண்மையில் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் திமுகவின் ஆ.ராசா பேசியிருந்தார். அப்போது அவர் 2ஜி வழக்கில் தன் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் இது குறித்து முதல்வருடன் விவாதிக்க தயார் என்றும் கூறினார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, 2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்றும் அதன் பிறகு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சிறைக்கு செல்வார் என்றும் தெரிவித்தார்.

ஆ.ராசா மற்றும் கனிமொழி இருவரும் நாட்டு பிரச்சினைக்கோ அல்லது மக்கள் பிரச்சினைக்கோ சிறைக்கு செல்லவில்லை என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஸ்டாலின், இதுவரை அதிமுக மீதான எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்