தமிழக செய்திகள்

மின்னல் தாக்கி 3 மாடுகள் செத்தன

விக்கிரவாண்டி பகுதியில் மின்னல் தாக்கி 3 மாடுகள் செத்தன

தினத்தந்தி

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தாலுகாவில் நேற்று முன்தினம் இடி- மின்னலுடன் மழைபெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் வாக்கூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி(வயது 52) என்பவரின் மாட்டு கொட்டகை மற்றும் அருகில் உள்ள குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது, மின்னல் தாக்கியதில் கொட்டகையில் கட்டிபோடப்பட்ட பசுமாடு பரிதாபமாக இறந்தது. இதுபற்றிய தகவலறிந்துவந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான தீயணைப்புவீரர்கள் தீயை அணைத்தனர். அதேபோல் பூண்டி கிராமத்தை சேர்ந்த சதீஷ், கப்பியாம்புலியூரை சேர்ந்த சுகுமார் ஆகியோருக்கு சொந்தமான தலா ஒரு பசுமாடு மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தன. இது பற்றி அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த அறிக்கையின் பேரில் தாசில்தார் இளவரசன், மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்