தமிழக செய்திகள்

புனேவில் இருந்து 3 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை

மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக 3 லட்சத்து 31 ஆயிரம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய தொகுப்பில் இருந்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.

அந்த வகையில் புனேவில் இருந்து நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், 28 பெட்டிகளில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 430 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனடியாக அவை பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு