தமிழக செய்திகள்

சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது முத்துராஜாபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சேகர்(வயது 42), ஜோதி(47), சரவணன்(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு