தமிழக செய்திகள்

சூதாடிய 3 பேர் கைது

எருமப்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள கஸ்தூரிபட்டி புதூர் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடுவதாக எருமப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 3 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. விசாரணையில் வரதராஜபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த வெள்ளையன் மகன் கணேசன் (வயது 62), எருமப்பட்டி ஜீவானந்தம் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் கோபாலகிருஷ்ணன் (33), எருமப்பட்டி கணேச தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் சந்துரு (33) ஆகிய 3 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. பின்னர் போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.550 பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்