தமிழக செய்திகள்

குழாய்கள் திருடிய 3 பேர் கைது

தினத்தந்தி

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே ஜடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 43). விவசாயி. இவர், தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அங்கு 3 பேர், 400 மீட்டர் நீளம் கொண்ட குழாய்களை திருடிக் கொண்டிருந்தனர். இதை கவனித்த ஜெகநாதன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து கல்லாவி போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மேட்டுசூளகரையை சேர்ந்த அறிவுமணி (29), சிதம்பரம் (33), பிரதாப் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு