தமிழக செய்திகள்

வியாபாரியை வெட்டி கவரிங் நகையை கொள்ளையடித்த 3 பேர் கைது

வியாபாரியை வெட்டி கவரிங் நகையை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25). இவர், ஆவடி அடுத்த கவுரிபேட்டையில் வசித்து வருகிறார். ஆவடி கோவில்பதாகை மசூதிக்கு பின்புறம் கவரிங் நகை கடை வைத்து உள்ளார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 3 பேர் திடீரென அசோக்குமார் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு கடையில் இருந்த கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் தலையில் 9 தையல் போடப்பட்டது.

இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த விஜய் (24), அருண்குமார் (25), பட்டாபிராம் பாபு நகரை சேர்ந்த சரத்குமார் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது