தமிழக செய்திகள்

சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்கா பறிமுதல் - 4 இளைஞர்கள் கைது

வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கார்களில் கடத்தப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே 3 சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த மூன்று சொகுசு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடமிருந்து 3 டன் குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் 3 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்