தமிழக செய்திகள்

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன

தினத்தந்தி

காரைக்குடி,

புதுவயல் அரசு ஆஸ்பத்திரி அருகே சாக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை போலீசார் மறித்தனர். அப்போது லாரியை நிறுத்திவிட்டு டிரைவர்கள் இருவரும் கீழே இறங்கி தப்பி ஓடி விட்டனர். லாரியில் சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணல் கடத்திய 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் நாகநாதபுரம் பகுதியில் இளையான்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாஸ்கரன்(வயது 28) என்பவரை கைது செய்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து