தமிழக செய்திகள்

கோவில் திருவிழாவில் சாமியாடிய வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

கோவில் திருவிழாவில் சாமியாடிய வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஈத்தாமொழி:

வடக்கு சூரங்குடியில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னவண்ணான் விளையைச் சேர்ந்த காசி மகன் ரவிஸ் (27) என்பவர் சாமியாடி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்ற சுடலை மணி (37) உள்பட 7 பேர் சேர்ந்து நீ எப்படி சாமி ஆடலாம் எனக் கூறியபடி அவரை கம்பி மற்றும் கல்லால் தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் சுடலைமணி ஆசைத்தம்பி, வெற்றிவேல், மற்றும் வெகின் துரை ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடிவருகின்றனர்.

--

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை