தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி:-

போச்சம்பள்ளி போலீசார் சந்தூர் சாலையில் ரோந்து சென்றனர். அங்குள்ள கடையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ஜிம்மாண்டியூரை சேர்ந்த பெருமாள் (வயது57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் உத்தனப்பள்ளி போலீசார் நஞ்சாரெட்டி கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு கடையில் புகையிலை பொருட்கள் விற்ற லதா (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். 2 கடைகளில் இருந்தும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற பழனி (52), ரேவதி (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு