தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல்

புவனகிரி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தினத்தந்தி

புவனகிரி

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கைலாஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன் மற்றும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் புவனகிரி கடைவீதி மற்றும் குரியமங்கலம் செல்லும் சாலைகளில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகைக்கடை உள்ளிட்ட கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது 2 பெட்டிக்கடை, 2 மளிகைக்கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் 4 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். புவனகிரி நகர பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து