தமிழக செய்திகள்

நடிகர் கருணாசிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

அவசரமாக புறப்பட்டதால் பையில் இருந்த குண்டுகளை கவனிக்கவில்லை என விமான நிலைய அதிகாரிகளிடம் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், நடிகருமான கருணாசிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பையில் 2 பாக்ஸ்களில் இருந்த துப்பாக்கி குண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது.

தன்னிடம் துப்பாக்கி உரிமம் (லைசென்ஸ்) இருப்பதகாவும், அதற்கான குண்டுகள்தான் இவை என கருணாஸ் விளக்கம் அளித்துள்ளார். விமானத்தில் துப்பாக்கி குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்பது தெரியும் என்றும் அவசரமாக புறப்பட்டதால் பையில் இருந்த குண்டுகளை கவனிக்கவில்லை எனவும் அதிகாரிகளிடம் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் விமானத்தில் பயணிக்க கருணாசுக்கு அனுமதி மறுத்த பாதுகாப்பு படையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக திருச்சி விமானம் புறப்பட்டு சென்றது.

நடிகர் கருணாசிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்