தமிழக செய்திகள்

420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

முட்டத்தில் 420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

தினத்தந்தி

ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முட்டம் தோணிமுக்கு சந்திப்பில் சென்றபோது, அங்கு ஒரு வீட்டின் முன் சந்தேகப்படும் வகையில் 12 பிளாஸ்டிக் கேன்கள் இருப்பதை போலீசார் கண்டனர். உடனே, அவற்றை சோதனை செய்தபோது அதில் 420 லிட்டர் படகுகளுக்கு வழங்கப்படும் அரசின் மானிய மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவற்றை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு