சென்னை,
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கு பிறகு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியில் 45 பறக்கும் படைகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன . வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. சுவர் விளம்பரங்கள், பேனர்களை அகற்ற அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 8 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்தலாம் என்றார்.