தமிழக செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது

கூடுவாஞ்சேரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அருகே ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக தைலாவரம் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 47) என்பவரை கைது செய்தனர். அதேபோல நந்திவரம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி அருகே உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பாலு (வயது 33) என்பவரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலையை பறிமுதல் செய்தனர். மண்ணிவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கிலால் (24), ஜாபர் (55), அயூப் (30) ஆகியோரை ஓட்டேரி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்