தமிழக செய்திகள்

மணல் கடத்த முயன்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்த முயன்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உடையானந்தல் கிராமத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் இருந்து மர்ம நபர்கள் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநாவலூர் போலீசார் உடையானந்தல் கிராமத்தில் உள்ள ஆற்று பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் அளிக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து 5 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய 5 மாட்டு வண்டி தொழிலாளர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து