தமிழக செய்திகள்

சென்னையில் முக கவசம் அணியாமல் சுற்றிய 5 ஆயிரம் பேருக்கு அபராதம்

சென்னையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி முக கவசம் அணியாமல் சுற்றிய 5 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று, அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவோர் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

இதன்படி, சென்னையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி முக கவசம் அணியாமல் 5 ஆயிரம் பேர் வரை சுற்றியுள்ளனர். அவர்களிடம், போலீசார் ரூ.200 வீதம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உள்ளனர். அதேபோல, சமூக இடைவெளி பின்பற்றாதது தொடர்பாக, 21 வழக்குகளை பதிவு செய்து, ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை