தமிழக செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு -டி.ஜி.பி. சங்கர்ஜிவால்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தினத்தந்தி

சென்னை,

டி.ஜி.பி. சங்கர்ஜிவால் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் பொதுமக்கள் செல்வதால், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள், கோவில்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலமாக இருக்கும். காணும் பொங்கல் அன்றும் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்