தமிழக செய்திகள்

தீபாவளியின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 568 வழக்குகள் பதிவு

தீபாவளியின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

"தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட 12-11-2023 மற்றும் 13-11-2023 ஆகிய இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதற்கான குறிப்பிட்ட நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி தவிரத்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவது 2,246 பேர் மீது 2,206 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.

அதில் 2,095 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 568 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட 2,095 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்