கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேருக்கு விடுதலை: 3 பேருக்கு சிறை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை இலங்கை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஜூலை 11-ம் தேதி புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தும், 2 பேருக்கு ஓராண்டு சிறையும், மேலும் ஒரு மீனவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 4 பேர் சென்ற படகின் உரிமையாளருக்கும், ஓட்டுநருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 5 மீனவர்கள் சென்ற படகின் உரிமையாளரும், ஓட்டுநரும் ஒரே நபர் என்பதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்