கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பல்வேறு கண்டங்கள் எழுந்த நிலையிலும், இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது. மேலும், அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்