தமிழக செய்திகள்

600 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 லிட்டர் மண்எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

கொல்லங்கோடு:

கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 லிட்டர் மண்எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நித்திரவிளை போலீசார் மங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மங்காடு பாலம் வழியாக முன்சிறையில் இருந்து கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். போலீசாரை கண்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை சோதனையிட்டனர். அப்போது அதில் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்எண்ணெய் 17 பிளாஸ்டிக் கேன்களில் 600 லிட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மண்எண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காருடன் மண்எண்ணெயை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்