தமிழக செய்திகள்

நம்பியூர் அருகே கார் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்

நம்பியூர் அருகே கார் கவிழ்ந்தது

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பூதிமடைபுதூரில் உள்ள அண்ணன்மார் கோவில் திருவிழாவிற்காக 11 பேர் ஒரு காரில் சென்றுகொண்டு இருந்தார்கள். மகேஷ் (வயது 27) என்பவர் காரை ஓட்டினார்.குருமந்தூர்-கொளப்பலூர் ரோட்டில் சென்றபோது, பூதிமடைப்புதூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் மகேஷ் உள்பட காரில் பயணம் செய்தமஞ்சுநாதன், நாகராஜ், மாதம்மாள், பத்திரம்மா, பல்லவி, திவ்யா ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தார்கள். இவர்கள் அனைவரும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எஞ்சிய 4 பேர் சிறு காயங்களுடன் தப்பினார்கள்.இந்த விபத்து குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு