தமிழக செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆயுதபூஜையை முன்னிட்டு பொதுமக்கள் பூஜை பொருட்கள் வாங்க மார்க்கெட் பகுதிகளில் குவிந்தனர். இந்தநிலையில் அங்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பணகுடி போலீசார் காயல்பட்டினத்தை சேர்ந்த கபீர் மகன் சதாம் உசேன் (வயது 29), நாங்குநேரியை சேர்ந்த சுந்தரமணி (29), கூடங்குளம் போலீசார் பூலாங்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணனையும் (33), வள்ளியூர் போலீசார் நம்பியான்விளையை சேர்ந்த வேல்முருகன் (42) என்பவரையும், முன்னீர்பள்ளம் போலீசார் கூதன்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (25), வெங்கடேஷ் (23), பாலமுருகன் (28) ஆகிய 7 பேரை கைது செய்தனர். பின்னர் அறிவுரைகள் வழங்கி அவர்களை போலீசார் விடுவித்தனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா