தமிழக செய்திகள்

பயங்கரவாதிகள் போல் மீண்டும் கடலூருக்குள் ஊடுருவ முயன்ற 7 பேர் பிடிபட்டனர்

பாதுகாப்பு ஒத்திகையையொட்டி பயங்கரவாதிகள் போல் மீண்டும் கடலூருக்குள் ஊடுருவ முயன்ற 7 பேர் பிடிபட்டனர்.

தினத்தந்தி

கடலூர் முதுநகர், 

இந்திய கடற்படையால், சி விஜில் என்ற பெயரில், இந்தியா முழுவதும் கடலோர பகுதிகளில் 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் கடலூர் துறைமுகம் வழியாக பயங்கரவாதிகள் போல் வேடமிட்டு நுழைய முயன்ற மத்திய, மாநில அதிரடி படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் 7 பேரை கடலோர காவல் படை குழும போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே சி விஜில் ஆபரேஷன் படி, பயங்கரவாதிகள் போல் மாறுவேடத்தில் வந்த 7 போலீசாருக்கும் மீண்டும் இலக்கை அடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவு, அவர்கள் 7 பேரும் மீண்டும் விசைப்படகு ஒன்றில் கடலூர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு கடலுக்குள் சென்றனர். அதனை தொடர்ந்து கடலூர் துறைமுகம் அருகே ரோந்து பணியில் இருந்த கடலோர காவல் படை குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், மீண்டும் அவர்கள் 7 பேரையும் மடக்கி பிடித்து துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து