தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ 870 கிராம் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனா.

அப்போது தென்ஆப்ரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்த இருவா மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். மேலும் அவர்களிடம் உள்ள பொருட்களையும் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த சூட்கேசில் ரகசிய அறைகள் மூலம் போதை பொருளை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ 870 கிராம் ஹெராயின் போதை பொருள் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருளை கடத்தி வந்த 2 ஆப்பிரிக்க பெண்களையும் கைது செய்தனர்.

கடந்த மாதம் 6ஆம் தேதி ரூ.100 கோடி மதிப்பிலான ஹெராயின் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு