தமிழக செய்திகள்

கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்ற 72 பேர் கைது

கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்ற 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

குடியரசு தினவிழாவையொட்டி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஆனாலும் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுவிற்றவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். திருச்சி மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் ரோந்து சென்று சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 31 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 280 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல் புறநகர் பகுதியில் முசிறி மற்றும் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 662 மதுபாட்டிலகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மணிகண்டம் நடுப்பாகலூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புதுச்சேரி மாநில 180 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெயராமன் என்பவரை கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது