தமிழக செய்திகள்

மாவட்டம் முழுவதும் 734 சிறப்பு முகாம்கள்

மாவட்டம் முழுவதும் 734 சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

தினத்தந்தி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று கிராம பகுதிகளில் 734 முகாம்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 961 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4 லட்சத்து 15 ஆயிரத்து 958 ரேஷன் கார்டுதாரரிடம் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு முகாம்கள் நேற்று தொடங்கின.

இந்த முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 13 ஆயிரத்து 283 ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் நகர்புற சிறப்பு முகாம்கள் வருகிற 4-ந் தேதி தொடங்கப்படுகிறது. கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்