தமிழக செய்திகள்

நாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன

விக்கிரவாண்டியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் செத்தன.

தினத்தந்தி

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டியில் வசித்து வருபவர் ஜாகிர் உசேன். இவருக்கு சொந்தமான சுமார் 50 ஆடுகளை விக்கிரவாண்டி கீழக்கொந்தை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது வீட்டின் அருகே பண்ணை வைத்து வளர்த்து வந்தார். ராமச்சந்திரன் தினசரி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, இரவில் பண்ணையில் அடைத்து விடுவது வழக்கம். அந்த வகையில் வழக்கம்போல் ஆடுகளை பண்ணையில் அடைத்து விட்டு ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, 8 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் செத்துக்கிடந்தன.  நள்ளிரவில் பண்ணைக்குள் புகுந்த நாய்கள் ஆடுகளை கதறிக்கடித்ததால் செத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதாவது காரணமா இருக்குமா என்று சுகாதாரத்துறையினர் மற்றும் விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு