தமிழக செய்திகள்

8 மயில்கள் விஷம் வைத்து சாகடிப்பு

தினத்தந்தி

மேட்டூர்:-

சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓலைப்பட்டி கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் 8 மயில்கள் இறந்து கிடப்பதாக மேட்டூர் வனச்சரக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சோலி (வயது 72), தனது நிலத்தில் பயிர் செய்த நெற்பயிர்களை பறவைகள் மற்றும் எலி, பெருச்சாளி போன்றவை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக விஷம் வைத்துள்ளார். இந்த விஷத்தை சாப்பிட்ட மயில்கள் இறந்து போனது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விவசாயி சோலியை வனத்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு