தமிழக செய்திகள்

திண்டுக்கல், தேனியில் 80 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

80 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினத்தந்தி

திண்டுக்கல்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் பட்டியல் தயாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

அதன்படி சொந்த ஊரில் அல்லது ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரியும் போலீசார் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பணியிட மாறுதல் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன.

இந்த நிலையில், திண்டுக்கல் மற்றும் தேனியில் 80 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 80 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து