தமிழக செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியவர்களிடம் இதுவரை 9 கோடி ரூபாய் அபராதம் வசூல் - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் இதுவரை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியவர்களிடம் இருந்து 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது குறித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மக்களின் ஒத்துழைப்பால் தமிழகத்தில் 60 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது ஆயிரமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக தமிழகத்தில் இதுவரை 12 லட்சம் பேரிடம் 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து