தமிழக செய்திகள்

பஞ்சாயத்து துணைத்தலைவர் கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி

சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவர் கையெழுத்தை போட்டு ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக தலைவி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

தினத்தந்தி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி பஞ்சாயத்தில் துணைத்தலைவராக இருந்து வருபவர் ரமேஷ்குமார் மனைவி மாரியம்மாள்.

இந்தநிலையில், தனது கையெழுத்தை போலியாக போட்டு பஞ்சாயத்து தலைவி குருவம்மாள், அவரது கணவர் காளிராஜ், பஞ்சாயத்து செயலாளர் சீனியம்மாள் ஆகியோர் ரூ.9 லட்சத்தை `செக்' மூலம் வங்கியிலிருந்து எடுத்து மோசடி செய்ததாக கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவி மாரியம்மாள் புகார் அளித்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை