தமிழக செய்திகள்

விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் தனது விவசாய நிலத்தில் நேற்று காலை வேர்க்கடலை அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது வேர்க்கடலை செடிகளுக்கு இடையில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்ட தொழிலாளர்கள் அலறி கூச்சலிட்டனர்.

உடனடியாக இது குறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பேரணாம்பட்டு வனவர் தயாளன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள நாய்க்கனேரி காப்புக்காட்டில் விட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு